வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தற்போது பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கிரீஸ் நாடு, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, அரசு வாகனங்களை இயக்க எரிபொருள் நிரப்பவோ கூட, நிதியின்றி தவிக்கிறது. சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டன. உள்ளூர் வங்கிகள் மூடப்பட்டு விட்டன.
 
நிதி நெருக்கடியை சமாளிக்க கிரீஸ் உலக வங்கியிடமும், ஐரோப்பிய வங்கியிடமும் தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டது. நாட்டின் நிதி நிலையை சமாளிக்க,மேலும் 161 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக கிரீஸ் பிரதமர் அந்தோணி சமராஸ் தெரிவித்துள்ளார். மானிய உதவி, மற்றும் பல சலுகைகளை நிறுத்தும் படி ஜெர்மனியும், பிரான்சும், கிரீசுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க கிரீஸ் இன்னும் கொஞ்ச கால அவகாசம் கேட்பது நிதி சுமையை அதிகரிக்கத்தான் செய்யும் என, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கிரீசுக்கு அடுத்த கட்ட உதவி செய்வது குறித்து, பெர்லின் நகரில், பிரான்ஸ் அதிபர் ஹோலன்டும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலாவும் நேற்று விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கிரீஸ் பிரதமருடன், இந்த வார இறுதியில் இந்த தலைவர்கள் இருவரும் விவாதிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக